மனசுக்கு என்னவோ போல இருக்கு…
பின்ன நினைச்சது எதுவும் நடக்கவா செய்யுது.
அப்பாட்ட எதாவது ஆசைப்பட்டு வாங்கித்தரச்சொன்னா இது எதுக்கு அது எதுக்குண்ணா ஒரே கேள்வி. அப்புரமாவது கேட்டது கிடைக்குமா? பெரும்பாலும் கிடைக்காது…
அதே போலதான்… பாருங்க சைன்ஸ் பரிட்சைக்காக நல்லா படிச்சியிருந்தேன். படிச்சி முடிச்சி அம்மாகிட்டயும் எழுதிக்காட்டிட்டேன்.
ஆனா, மழைவந்ததால நேற்று பரிட்சை இல்ல. இன்றைக்குண்ணு சொன்னாங்க. இன்றைக்கு அப்பா கூட ஸ்கூலுக்கு போன அப்புறம் தான் சொல்லுராங்க….
இன்னைக்கும் ஸ்கூல் கிடையாதாம். இத நேற்றைக்கே சொல்லி இருக்கலாமுல்லா?…
இன்றைக்கு ஸ்கூல் ஏன் கிடையாது [...]
‘சும்மா...’ பகுப்புக்கான தொகுப்பு
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…
Posted in சும்மா... on டிசம்பர் 20, 2007 | 1 மறுமொழி »
கணக்கு பிணக்கு ஆமணக்கா?…
Posted in சும்மா... on டிசம்பர் 16, 2007 | 3 மறுமொழிகள் »
நாளை எனக்கு அரையாண்டு தேர்விற்கான கணக்குப்பரிட்சை.
உங்களுக்கு கணக்கு பிடிக்குமா?
பிடிக்காதா?…
ஆனா எனக்கு கணக்கு பிடிக்கும். எங்க அண்ணனுக்கும் கணக்கு பிடிக்கும். எங்க அப்பாவும் முன்னால கணக்குத்தான் படிச்சிருக்காங்க.
எனக்கு கணக்கு மட்டுமில்ல சைன்ஸ், சோசியல் பாடமும் பிடிக்கும்.
எங்க சொந்தக்காரங்க பெறவு நீ என்னவா வருவாய்ண்ணு கேட்ப்பாங்க… எனக்கு சொல்லத் தெரியல…
சரி என்ன எழுதச்சொல்லனும்னு தெரியல… அதனால பெறவு பார்ப்பமா…
வருவோம்ல… வரட்டுமா?!….
ஃஃஃ