மனசுக்கு என்னவோ போல இருக்கு…
பின்ன நினைச்சது எதுவும் நடக்கவா செய்யுது.
அப்பாட்ட எதாவது ஆசைப்பட்டு வாங்கித்தரச்சொன்னா இது எதுக்கு அது எதுக்குண்ணா ஒரே கேள்வி. அப்புரமாவது கேட்டது கிடைக்குமா? பெரும்பாலும் கிடைக்காது…
அதே போலதான்… பாருங்க சைன்ஸ் பரிட்சைக்காக நல்லா படிச்சியிருந்தேன். படிச்சி முடிச்சி அம்மாகிட்டயும் எழுதிக்காட்டிட்டேன்.
ஆனா, மழைவந்ததால நேற்று பரிட்சை இல்ல. இன்றைக்குண்ணு சொன்னாங்க. இன்றைக்கு அப்பா கூட ஸ்கூலுக்கு போன அப்புறம் தான் சொல்லுராங்க….
இன்னைக்கும் ஸ்கூல் கிடையாதாம். இத நேற்றைக்கே சொல்லி இருக்கலாமுல்லா?…
இன்றைக்கு ஸ்கூல் ஏன் கிடையாது தெரியுமா?….
தெரியாதா?…
சொல்லிரட்டா…
இங்க ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோயில்ல இன்றைக்கு சொர்க்க வாசல் திறப்பு அதனாலதான்.
திருச்சிக்கு நாங்க வந்து நாலு வருசம் ஆச்சி ஆனா அப்பா ஒருக்கா கூட சொற்கவாசல் திறக்கற அன்றைக்கு கூட்டிட்டு போனதில்ல. ஆனா சொற்கவாசல் திறந்திருக்கரப்ப கூட்டிட்டு போயிருக்காங்க.
சொற்கவாசல் முன்ன நின்னுகூட நான் போட்டோ எடுத்து இருக்கேன்.
அந்த படத்த சாயந்தரம் போடரேன் சரியா?…
இப்ப வரேன்…
அப்பாவுக்கு ஆபீஸுக்கு நேரம் ஆகுதாம்.
//அந்த படத்த சாயந்தரம் போடரேன் சரியா?…//
ஆகா… நீங்களும் மேகா தொடரை ஆரம்பிச்சிட்டிங்களா?