Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

டிசம்பர், 2007 க்கான தொகுப்பு

ஸ்ரீரெங்கம் ரெங்க நாதர் கோயிலில் சொர்க்க வாசல் முன்பாக நான், என் நேர் பின்னால் ஆதி அண்ணன், என் பக்கத்தில் தம்பி பிரஜி, அவனுக்கு பின்னால் அண்ணன் பிரசாந்த், நடுவில் அண்ணன் விக்னேஷ்(கடைசி பெயர் மூவரும் பெரியம்மா மகன்கள்)

முழு பதிவையும் வாசிக்க »

மனசுக்கு என்னவோ போல இருக்கு…
பின்ன நினைச்சது எதுவும் நடக்கவா செய்யுது.
அப்பாட்ட எதாவது ஆசைப்பட்டு வாங்கித்தரச்சொன்னா இது எதுக்கு அது எதுக்குண்ணா ஒரே கேள்வி. அப்புரமாவது கேட்டது கிடைக்குமா? பெரும்பாலும் கிடைக்காது…
அதே போலதான்… பாருங்க சைன்ஸ் பரிட்சைக்காக நல்லா படிச்சியிருந்தேன். படிச்சி முடிச்சி அம்மாகிட்டயும் எழுதிக்காட்டிட்டேன்.
ஆனா, மழைவந்ததால நேற்று பரிட்சை இல்ல. இன்றைக்குண்ணு சொன்னாங்க. இன்றைக்கு அப்பா கூட ஸ்கூலுக்கு போன அப்புறம் தான் சொல்லுராங்க….
இன்னைக்கும் ஸ்கூல் கிடையாதாம். இத நேற்றைக்கே சொல்லி இருக்கலாமுல்லா?…
இன்றைக்கு ஸ்கூல் ஏன் கிடையாது [...]

முழு பதிவையும் வாசிக்க »

நாளை எனக்கு அரையாண்டு தேர்விற்கான கணக்குப்பரிட்சை.
உங்களுக்கு கணக்கு பிடிக்குமா?
பிடிக்காதா?…
ஆனா எனக்கு கணக்கு பிடிக்கும். எங்க அண்ணனுக்கும் கணக்கு பிடிக்கும். எங்க அப்பாவும் முன்னால கணக்குத்தான் படிச்சிருக்காங்க.
எனக்கு கணக்கு மட்டுமில்ல சைன்ஸ், சோசியல் பாடமும் பிடிக்கும்.
எங்க சொந்தக்காரங்க பெறவு நீ என்னவா வருவாய்ண்ணு கேட்ப்பாங்க… எனக்கு சொல்லத் தெரியல…
சரி என்ன எழுதச்சொல்லனும்னு தெரியல… அதனால பெறவு பார்ப்பமா…
வருவோம்ல… வரட்டுமா?!….
ஃஃஃ

முழு பதிவையும் வாசிக்க »

காணியாறு மலை.

எனக்கு மலை ரெம்ப பிடிக்கும். ஏண்ணா மலை பெரிசா, அழகா, நெறைய அழகழகான மரங்கள், மிருகங்கள், குரங்கு எல்லாம் இருக்கும்லா, அதனால தான் மலைய ரெம்ப பிடிக்கும்.
அதுவும் எங்க ஊரு மலையத்தான் எனக்கு ரெம்ப பிடிக்கும். எங்க ஊருமலை பேரு காணியாறு மலை. அதுக்கு எதுக்கு காணியாறு மலைண்ணு பேருவந்தது தெரியுமா?…
தெரியாதா?…
பரவாயில்ல, சொல்ரேன்…நானே சொல்ரேன்…கொஞ்சம் பொறுங்க…
அந்த மலையடிவாரத்துல எங்களோட மாந்தோப்பு இருக்கு. இங்கு உள்ள மா, கொய்யா, புளி மரங்களை என் தாத்தா மார்த்தாண்டம் தான் [...]

முழு பதிவையும் வாசிக்க »

வந்துட்டோம்ல…

இது நான் ஐஸ்வர்யா. அப்பா, அம்மா, மாமா, அத்தை எல்லாரும் செல்லமா ஐஸ் அப்படிண்ணு கூப்பிடுவாங்க.
எங்க தாத்தா என்ன ஐஸ்வர்ய லட்சுமின்னுதான் கூப்பிடுவாங்க. பாவம் தாத்தா இப்ப இல்ல கடவுள்கிட்ட போய்ட்டாங்க.
என் அண்ணா பெயர் ஆதித்யா மார்த்தாண்டம். எங்க தாத்தா பேரும் மார்த்தாண்டம் தான். தாத்தா நிறைய கவிதை எழுதியிருக்காங்க. அப்பா படிக்கும் போது நானும் கேட்டு இருக்கேன்.
அப்பாவும் கவிதை எழுதுவாங்க. இங்க நெட்ல அப்பா கவிதை போடும்போது பார்த்துட்டு இருப்பேன். அப்பா எனக்கும் இது மாதிரி [...]

முழு பதிவையும் வாசிக்க »